மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.
காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி
வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக இளையராஜா பாடியிருக்கும் ‘காட்டு மல்லி’ பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள் சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா? பிடிக்காதவர்களைத் திட்டும் உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?
அடங்க மறுத்த முதல் சிறுத்தை - கணேஷ் சுப்ரமணி
உழைக்கும் மக்களால்தான் வரலாறு நகர்கிறது. ஆனால் இந்திய நிலைமையில் வரலாறு என்று எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. அவர்களின் பாத்திரம் மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோதான் வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பட்டியல் இன மக்களுக்கு வரலாறு என்பதே மறுக்கப்பட்ட ஒன்றுதான். சாதியக் கட்டுமானத்தின் அடுக்குகள் எல்லாமும் ஒடுக்குமுறைகளால் நிரம்பியவை.
பொன்னியின் செல்வன் - 1
'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:
தமிழ் நாடகம்: அன்றும் இன்றும் (உரை) - கணேஷ் சுப்ரமணி
மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - கணேஷ் சுப்ரமணி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டம் இந்தியச் சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகள் பெரும் சிதைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்த காலம் அது. வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆதிக்கம், கிறித்தவச் சமயப் பரவல் போன்றவற்றால் இங்கு கல்வி முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. காலங்காலமாக இருந்து வந்த வேதக் கல்வி, குருகுலக் கல்வி போன்றவை மாற்றம் பெற்றன. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒன்றாக இருந்த பார்வையும் மாறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி கற்ற சில இந்தியர்களால் புதிய கல்விச் சிந்தனைகள் மலர்ந்தன. தமிழ்ச் சூழலில் இப்புதிய சிந்தனைகளைப் பேரூற்றாகப் பெருக்கெடுக்கச் செய்தவர் பாரதியார். குறிப்பாகப் பெண் கல்வி குறித்த அவருடைய சிந்தனைகள் அன்றையச் சூழலில் மரபுகளை மீறியதாகவும் எதிர்காலச் சிந்தனைகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தன. ஆனால் அவருக்கு முன்பே தமிழ் மரபுகளிலிருந்து விலகாமல் பெண் கல்வி குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
ஒரு நண்பனின் மரணம் - கணேஷ் சுப்ரமணி
நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்
ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்
அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது
நண்பனின் மரணம்.